states

img

ஆந்திரா: எண்ணெய் டேங்க்கை சுத்தம் செய்த 7 தொழிலாளர்கள் பலி

ஆந்திராவில் எண்ணெய் டேங்க்கை சுத்தம் செய்த 7 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனமான அம்பதி சுப்பண்ணா எண்ணெய் தொழிற்சாலையில் எண்ணெய் டேங்க்கை சுத்தம் செய்யும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். டேங்க்கின் கசடுகளை சுத்தம் செய்தபோது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த 7 பேரும் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

;